சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘Mr and Mrs Mohgan’s Super Crispy Roti Prata’ கடை மீண்டும் திறப்பு!

Asia one

சிங்கப்பூரில் புகழ்பெற்ற பிரபல Mr and Mrs Mohgan’s Super Crispy Roti Prata கடையின் உரிமையாளரான சோமசுந்தரம் மோகன் கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 56. இதையடுத்து, கடை கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்தது.

சிங்கப்பூருக்கு வரும் சரக்கு ஓட்டுநர்கள், உடன் வரும் ஊழியர்களுக்கு இனி On-arrival கோவிட்-19 சோதனை இல்லை!

இந்த நிலையில், Mr and Mrs Mohgan’s Super Crispy Roti Prata கடை மீண்டும் திறக்கப்பட்டது. மறைந்த சோமசுந்தரம் மோகனின் மனைவி சரோஜா மோகன் கடையை மீண்டும் திறந்துள்ளார். அவர், கடையில் இரண்டு ஆண் நபர்களை பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் பராட்டா தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

தனது கணவரை போல் வாடிக்கையாளர்கள் தரும் ஆர்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்கிறார். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்க்கு பேட்டியளித்த சரோஜா மோகன், “வீட்டில் இருந்தால் கணவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அதனால் கடைக்கு வருகிறேன். அவர் விருப்பத்தை நிறைவேற்றுவேன். நான் தொடர்ந்து கடையை நடத்த விரும்புகிறேன்” என்றார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் திடீரென சுருண்டு விழுந்து மரணம்

Mr and Mrs Mohgan Super Crispy Roti Prata கடை 300 ஜு சியாட் சாலையில் (300 Joo Chiat Road) உள்ள டின் யெங் காஃபி கடையில் (Tin Yeang coffee shop) அமைந்துள்ளது. தற்போதைய இடத்தில் உள்ள கடை சுமார் எட்டு மாதங்களாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சோமசுந்தரம் மோகனின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து இரங்கலைத் தெரிவித்து வருகின்றன.