சிங்கப்பூர் இட்லி கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்!

சிங்கப்பூர் இட்லி கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்!
Video Crop Image

 

கடந்த இரண்டு நாட்களாக, சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர்கள் எஸ்.ஈஸ்வரன், கா.சண்முகம் ஆகியோரைத் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

மூத்த தமிழ் பேராசிரியரைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழிலதிபர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தொழில் முதலீடுகள் தொடர்பாக, தமிழக அரசு- சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

இந்த நிலையில், இன்று (மே 25) காலை தனது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாங்கி விமான நிலையம் செல்லும் வழியில், லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல முருகன் இட்லி கடைக்கு தனது மனைவியுடன் சென்று தேநீர் அருந்தினார். அதற்கான கட்டணத்தையும் செலுத்தினார். பின்னர், அங்கிருந்த உணவகத்தின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

அதேபோல், உணவகத்திற்கு வெளியே குவிந்திருந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.