சிங்கப்பூரில் பிரபலமான நிறுவனமான மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் (Maestro Productions) , தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களை அழைத்து வந்து சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட சிசு… யார் செய்தது? – போலீஸ் தேடல்
அந்த வகையில், கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி அன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சியும், கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19- ஆம் தேதி அன்று பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல் நிகழ்ச்சியும், கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5- ஆம் தேதி பின்னணி பாடகர் ஸ்ரீராம் நிகழ்ச்சியும், இந்தாண்டு மார்ச் மாதம் 3- ஆம் தேதி அன்று இசையமைப்பாளர் அனிருத்தின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும், சிங்கப்பூரில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூரில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்கள் வரும் தமிழ் புத்தாண்டு நாளான வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.