சிங்கப்பூரில் COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முஸ்தபா சென்டர், தெம்பனிஸ் மால் மற்றும் கோலாங் செராய் சந்தை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் லாம் ..!
குறிப்பிட்ட நேரங்களில் மேலே குறிப்பிட்ட அந்த இடங்களுக்குச் சென்றவர்கள், தாங்கள் சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்கள் தங்கள் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சென்றுவந்த விவரம்:
- ஜூன் 4 ஆம் தேதி முஸ்தபா சென்டர்
- ஜூன் 2 ஆம் தேதி தெம்பனிஸ் மாலின் அடித்தளம் 1
- மே 26 அன்று கோலாங் செராய் சந்தை மற்றும் உணவு நிலையம்
இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 383 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!