நவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ ஊஞ்சல் அலங்காரம்!

நவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ ஊஞ்சல் அலங்காரம்!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் நவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த சிங்கப்பூர் தூதர்!

அதன் தொடர்ச்சியாக, நவராத்திரி திருவிழாவின், ஐந்தாவது நாளான நேற்று (அக்.19) ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

அதேபோல், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) உள்ள அம்மன் உற்சவர் சிலைக்கு ஸ்ரீ ஊஞ்சல் அலங்காரம் (Sri Oonjal Alangaram) செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஊஞ்சல் அலங்காரம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், உள்ள உற்சவர் சிலைக்கு ஸ்ரீ தனலெக்ஷ்மி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.