நவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலு மங்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள்!

நவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலு மங்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள்!
Photo: HEB

 

நவராத்திரி திருவிழாவின், ஆறாவது நாளான நேற்று (அக்.20) சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இந்த அலங்காரத்தை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

அதேபோல், ஸ்ரீ சிவன் கோயிலில், அம்மன் உற்சவர் சிலைக்கு ஸ்ரீ கெஜலஷ்மி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.