ஒவ்வொரு சிங்கப்பூர் மற்றும் நிரந்தரவாசி குடும்பங்களும் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் தேசிய தின அணிவகுப்புப் பைகள் விநியோகிக்கப்பட உள்ளன.
அந்த பைகள், சமூக மையங்கள் / கிளப்புகள் (CCs) மற்றும் குடியிருப்பாளர்கள் குழு (RC) மையங்களில் இருந்தும் விநியோகிக்கப்படும்.
இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!
குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் பொது விடுமுறை நாட்களில் தவிர, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பைகள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை அனைத்து CCகளிலும், மேலும் ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை அனைத்து RCகளிலும் கிடைக்கும்.
வரும் ஆகஸ்ட் 9ம் தேதி தேசிய தினத்திற்கு முன்னதாக சிங்கப்பூர் கொடியை வீடுகளுக்கு வெளியே காட்சிப்படுத்த ஊக்குவிக்கப்படுவதாக NDP2020 செயற்குழு மற்றும் மக்கள் சங்கம் சனிக்கிழமை (ஜூலை 18) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
பொதுவான NDP பையில் 20 முதல் 25 பொருட்கள் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு ஒவ்வொரு பையிலும் 12 உருப்படிகள் இருக்கும், என்று NDP 2020 செயற்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பையில், கை சுத்திகரிப்பு மருந்துகள், ஒரு தெர்மோமீட்டர் மற்றும் முகக் கவசம் ஆகியவை இருக்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : நோய்த்தொற்றுகளின் இரண்டாம் கட்டத்திற்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும்..!