சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க வேண்டும் என கடிதம்

சென்னை மற்றும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவுக்கும் கூடுதலாக விமானம் வேண்டும் என்று தமிழ்நாட்டின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ளார்.

சர்வதேச பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறக்க உள்ள மலேசியா

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல்வேறு நாடுகளில் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அதே வேளையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் குறைவாகவே சென்றன.

ஆனாலும், தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அப்பகுதிகளுக்கு விமானங்கள் இன்னமும் இயக்கப்படவில்லை என்றும் அவர் கடிதத்தில் கூறினார்.

தமிழக ஊழியர்கள் சிங்கப்பூர் செல்ல காத்திருக்கும் வேளையில், சென்னை திருச்சியில் இருந்து கூடுதல் விமானங்களை அங்கு இயக்க வேண்டும்.

பல்லாயிரக் கணக்கானோர் சிங்கப்பூர் மற்றும் மலேசியா செல்ல தயாராக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்