வேலை அனு­ம­திச் சீட்­டு­டன் சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு புதிய விதிமுறை!

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman

சிங்­கப்­பூ­ரில் ஜூலை 1 முதல் புதிய விதி­மு­றை­கள் சில நடப்­புக்கு வந்­துள்­ளன.

அதன்படி, 18 வய­துக்கு மேலா­னோர் தங்­கள் ஆரோக்­கிய நிலை குறித்­துத் தெரி­வித்து இரண்­டா­வது கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­ வேண்டும்.

நீரி­ழிவு, இத­யச் செய­லி­ழப்பு, ஆஸ்­துமா, ஈரல் அழற்சி, பக்­க­வா­தம், புற்­று­நோய்க்கு சிகிச்சை எடுத்­துக்­கொள்­வோர் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு இது முக்கியாமாக பொருந்­தும்.

நுரை­யீ­ரல் தொற்று நோயா­ளி­க­ளுக்கு மருந்­த­கங்­க­ளி­ல் கட்டண சலுகை வழங்கப்படும்.

மித­மான நோய்த்­தொற்று அறி­கு­றி­க­ளு­டன் இருப்பவர்கள் வீட்­டி­லேயே குண­ம் அடைய தொலை மருத்­து­ சேவை வழங்கப்படும்.

இருப்­பி­னும் வீட்­டி­லேயே குணம் அடை­யப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டோ­ருக்­குக் கட்­ட­ணச் சலுகை தொடர்ந்து வழங்­கப்­படும்.

புகை­பி­டிப்­ப­தற்­கான தடை கூடு­த­லான இடங்­க­ளுக்கு நேற்று முதல் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பொதுப் பூங்­காக்­கள், தோட்­டங்­கள், 10 கடற்­க­ரை­கள், பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் துடிப்­பு­மிக்க, அழ­கான, தூய்­மை­யான நீர்­நி­லை­கள் திட்­டத்­தின்­கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் இடங்­கள் அனைத்­திற்­கும் இது பொருந்­தும்.

வேலை அனு­ம­திச் சீட்­டு­டன் சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இனி வெளி­நாட்­டில் பதி­வு­செய்­யப்­பட்ட வாக­னத்தை சிங்கப்பூரில் வைத்­தி­ருக்­கவோ பயன்­ப­டுத்­தவோ அனு­மதி இல்லை.