நியூ அப்பர் சாங்கி சாலையில் ஒருவரை ஆயுதத்தால் தாக்கிய சந்தேகத்தில் ஆடவர் கைது

indian-origin-man charged singapore

ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் 31 வயது ஆடவரை கைது செய்துள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்தது.

நியூ அப்பர் சாங்கி சாலையில் கடந்த அக்டோபர் 26 அன்று பிற்பகல் 3:35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து புகார் பெற்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

மனைவியை கத்தியால் தாக்குவேன் என மிரட்டல் – போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளே தள்ளிய மனைவி

அதில் 69 வயதுடைய நபரை மற்றொரு ஆடவர் கத்தியால் தாக்கியதாக புகார் கூறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், பாதிக்கப்பட்டவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

எனினும், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய ஆடவர் தப்பிச் சென்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

அதன் பின்னர், பெடோக் போலீஸ் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து, சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.

மேலும், அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து ஆயுதம் மீட்கப்பட்டு சாட்சியகமாக கைப்பற்றப்பட்டது.

சினிமா திரையரங்கில் அளவில்லா இலவச பாப்கார்ன் – அண்டா, சட்டிகளோடு படம் பார்க்க கிளம்பிய ரசிகர்கள்