அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் மரணம்!

Person dead after fire at New Upper Changi Road flat
SCDF/Facebook

சிங்கப்பூரில் உள்ள பிளாக் 27 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் (Blk 27 New Upper Changi Road) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (மார்ச் 09) மதியம் 01.15 மணிவாக்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் அங்கு வசித்து வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் உயிரிழந்தார் என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு தினசரி சோதனை, தனிமை இல்லை – அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட நாடு

நான்காவது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஒன்பது பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாக திரு ஹெங் கூறினார்.

இதனை அடுத்து, அந்த குடும்பம் தற்போதைக்கு தங்குவதற்கு தற்காலிகமாக இடம் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த குடும்பத்தை சென்று பார்த்ததாகவும், அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் காலமானார் என்பதை அறிந்து வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் திரு ஹெங் கூறினார்.

மேலதிக விவரங்கள்: நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா பயணம்… திருச்சி, கோவையில் இருந்து குறைந்த கட்டண சலுகை