புதிய ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்ட TOTO குலுக்கல் போட்டி ஒன்றை Singapore pools அறிவித்தது.
கடந்த ஜன.5 அன்று நடந்த இந்த குலுக்கல் போட்டியில், முதல் பரிசு S$5 மில்லியன் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.
“வேலையை விட்டு தூக்கிட்டோம்” – திடீரென வந்த அறிவிப்பு.. அழுது புலம்பிய ஊழியர்கள்
இந்நிலையில், S$5,895,522 என்ற பிரம்மாண்ட முதல் பரிசை மூன்று வெற்றியாளர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் S$1,965,174 என்ற பங்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று Singapore pools கூறியுள்ளது.
அதாவது, இந்திய மதிப்பில் ஒருவருக்கும் ரூ.12 கோடியே 28 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டு பேர், QuickPick Ordinary Entry மூலம் வெறும் S$1 க்கு டிக்கெட் வாங்கியுள்ளனர்.
இரண்டாம் பரிசை 17 பேர் பங்கிட்டு கொள்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா $73,010 தொகை கிடைக்கும்.
மூன்றாம் பரிசை சுமார் 608 பேர் பங்கிட்டு கொள்வதாகவும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவில் விழுந்த மரம்.. கார், லாரி உட்பட 6 வாகனங்கள் பாதிப்பு