ஒன்றாக கூடியதாக 10 பேரிடம் போலீசார் விசாரணை – காயம் ஏற்படுத்தியதாக ஒருவர் கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்கவில்லை என்ற சந்தேகத்தின்பேரில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரை காயப்படுத்தியதற்காக 25 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில் சதி திட்டம் – சிங்கப்பூர் தம்பதிக்கு சிறை

கடந்த அக்டோபர் 30 அன்று, நியூட்டன் சாலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 10 பேர் ஒன்றாக கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அந்த 10 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை ஹோட்டல் மீறியதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் சுற்றுலா அமைப்பு விசாரித்து வருகிறது.

கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 25 வயதான ஆடவர், மற்ற இரு நபர்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்டதாகவும், அவர்களுக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் போலீசார் கண்டறிந்தனர்.

மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான செயல் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.

தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்கிய ஆடவர் – 4 பேர் மீது போலீஸ் விசாரணை