புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை- இந்தியரை கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை!

File Photo Via The Singapore Police Force

சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் (Sentosa Island) உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2023- ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக, டிசம்பர் 31- ஆம் தேதி அன்று நள்ளிரவு புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஹோட்டலில் இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்ற 25 வயது இளைஞர் தங்கியிருந்துள்ளார்.

கழிவறையின் கதவுக்கு அடியில் செல்போனுடன் நீட்டப்பட்ட கை! – அலறிய பெண்கள்! சிக்கிய இளைஞர்!

அப்போது, தான் தங்கியிருந்த ஹோட்டலில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த ஹோட்டலுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து, அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்ற இந்தியரை சுமார் இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரிடம் விசாரணையும் நடத்தினர்.

பின்னர், ஜனவரி 2- ஆம் தேதி அன்று சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷியை சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதில், ஜனவரி 1- ஆம் தேதி அதிகாலை 02.55 மணியளவில் சிலோசோ கடற்கரையில் (Siloso Beach) உள்ள கழிவறைக்குள் சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் ஒரு பெண்ணை அறைக்குள் தள்ளித் கதவைப் பூட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க! – Singpass சேவையில் ஏற்பட்ட கோளாறு!

இதையடுத்து, சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷியை வரும் ஜனவரி 30- ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.