நெருங்கும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள்…மதுரை- சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கியுள்ள நிலையில், மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரை செல்வதற்குமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு!

டிசம்பர் மாதத்தில் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து வரும் நிலையில், அந்த விடுமுறையில் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று பணியாளர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, சிங்கப்பூருக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வரவிருப்பதால் சிங்கப்பூர் வழித்தடங்கள் சார்ந்த விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற பயணி – போலீஸ் விசாரணை

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.com/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.