ரயில் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற பயணி – போலீஸ் விசாரணை

ரயில் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற பயணி - போலீஸ் விசாரணை
Yazid Jaffar/Facebook

பயணி ஒருவர் ரயில் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இது குறித்த போலீசாரின் விசாரணைகளுக்கு SMRT உதவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்

அந்த பயணி ரயில் கதவைத் திறக்க முயற்சிப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறினர்.

நிலைய ஊழியர்கள் இது குறித்து விசாரிக்க ரயிலுக்குள் நுழைந்ததாகவும், ஆனால் அந்த பயணி ஒத்துழைக்காமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் SMRT நிலைய ஊழியர் கூறினார்.

இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் பயணிகள் மற்றும் ரயிலில் உள்ள மற்ற பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்