‘புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள்- 2024’: திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- விறுவிறுப்படைந்த டிக்கெட் முன்பதிவு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

 

புத்தாண்டு நாளை (டிச.31) மாலை முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. தொடர்ச்சியாக, அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் (Flyscoot) விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.

இந்தியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் பதக்கங்களைக் குவித்து இரண்டாமிடம் பிடித்த சிங்கப்பூர் மாணவர்கள்!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஸ்கூட் விமான நிறுவனம். இந்த விமான சேவைகள் நேரடி விமான சேவைகள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

திருச்சி, சிங்கப்பூர் வழித்தடத்தில் 2024 ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய ஊழியர் மீது மோதிய வாகனம்.. தூக்கக் கலக்கம் தான் காரணம்

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.flyscoot.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.