சிங்கப்பூரில் புதிதாக 373 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!

No Singaporean and PR cases among the 373 new Covid-19 cases in Singapore
No Singaporean and PR cases among the 373 new Covid-19 cases in Singapore

சிங்கப்பூரில் நண்பகல் (மே 28) நிலவரப்படி, புதிதாக 373 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 33,249ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி யாரும் இதில் பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.