சிங்கப்பூரில் மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Photo: Yahoo

சிங்கப்பூரில் சனிக்கிழமை (நவம்பர் 20) நிலவரப்படி, மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

உயிரிழந்தவர்கள் 62 மற்றும் 98 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?

தடுப்பூசி போடாத நபரை தவிர மற்ற அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இந்த மருத்துவ நிலைமைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் குறிப்பிடவில்லை.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 654ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த தீவிர சிகிச்சை பிரிவு (ICU) விகிதம் 56.8 சதவீதமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு பதிவுகள் வெளியிடப்பட்டதிலிருந்து ய்து மிகக் குறைவு ஆகும்.

வணிக ரீதியான பயணிகள் விமானங்கள்… இந்தியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை