கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு OCBC வங்கியும் அதன் ஊழியர்களும் நான்காவது தவணையில் கூடுதல் S$1.225 மில்லியனை நன்கொடையாக வழங்க உள்ளனர்.
இந்த உதவியின் மூலம் சுமார் 55,000 வெளிநாட்டு ஊழியர்களும் பலனடைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 காரணமாக அதிகமானோர் வேலை இழக்கலாம் – MAS..!!
வசதிகுறைந்த சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு 800 வெள்ளி பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும், கூடுதல் உதவி தேவைப்படுவோருக்கு அதிகத் தொகைக்கான பற்றுச்சீட்டுகள் தரப்படும் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.
உணவு, தனிநபர் மருத்துவப் பாதுகாப்புச் சாதனங்கள், துப்புரவுச் சாதனங்கள் ஆகியவற்றுடன் ஊழியர்களின் தனிப்பட்ட தேவைகளை வழங்கவும் வழிவகை செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!