OCBC வங்கியின் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!

Photo: Wikipedia

 

OCBC வங்கியின் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை

சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று OCBC வங்கி. சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி, மலேசியா, தாய்லாந்து, புரூணை, மியான்மர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது வங்கிக் கிளைகளைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், OCBC வங்கி ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “உலகம் முழுவதும் OCBC குழும வங்கிகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொடக்க நிலை ஊழியர்கள் (Junior Employees) 14,000 பேருக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்படும். இதற்காக, சிங்கப்பூர் மதிப்பில் 9 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிங்கப்பூரில் மட்டும் தங்களது வங்கி குழுமத்தில் பணிப்புரியும் 4,600 பேருக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்படும்.

செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய சிங்கப்பூர் சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

அன்றாடம் உயர்ந்து வரும் வாழ்க்கை செலவினங்களை சமாளிக்கும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொகை தொடக்க நிலை ஊழியர்களுக்கு மிகவும் உதவும். OCBC குழுமத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 40%- க்கும் அதிகமானோருக்கு இந்த தொகை வழங்கப்படவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள தொகையை தொடக்க நிலை ஊழியர்கள், நடப்பாண்டில் பிப்ரவரி முதல் மார்ச் வரை பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.