சிங்கப்பூரில் சாலையைக் கடக்கவிருந்த பாதசாரிகளை மசராட்டி கார் மோதியதாகக் கூறப்படுகிறது, இதன் காரணமாக குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்.
புத்தாண்டு தினம் ஜன. 1, அன்று இரவு 9 மணியளவில், கிரேஞ்ச் சாலை (Grange Road) மற்றும் ஆர்ச்சர்ட் சாலை (Orchard Road) சந்திப்பில், ஆர்ச்சர்ட் கட்டிடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக Zaobao.com.sg செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சண்டை: மரப்பலகையால் தாக்கியதில் ஒருவர் மரணம் – சந்தேக நபர் கைது
இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டாஷ்கேம் வீடியோ காட்சிகளின் மூலம், சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் கருப்பு மசராட்டி கார் நிற்பதை காணமுடிகிறது.
Zaobao.com.sg கூறியதாவது; 20 வயதுடைய பெண் ஒருவர் சாலையில் அசைவில்லாமல் கிடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறினார்.
இந்த விபத்தால் ஆர்ச்சர்ட் சாலையின் இரண்டு வழித்தடங்கள் மூடப்பட்டது, இதன் விளைவாக 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்