ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) ஏற்பட்ட சண்டையில் 29 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அன்று காலை 6 மணியளவில் Concorde ஹோட்டல் மற்றும் ஷாப்பிங் மால் அமைந்துள்ள 100 ஆர்ச்சர்ட் சாலையில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 22 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்
அதில் 23 மற்றும் 29 வயதுடைய இருவர் மட்டும் பல காயங்களுடன் காணப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர், அதில் 29 வயது ஆடவர் மட்டும் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செங்காங்கில் உள்ள Fernvale சாலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் 30 வயதுடைய ஆடவர் ஒருவர் மட்டும் இன்று போலீசில் சரணடைந்தார்.
பிடிபட்ட சந்தேக நபர்களில் மூவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக இன்று திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் 28 வயதான மெர்வின் வெரில் டாட், 32 வயதான பாலகிருஷ்ண சுப்ரமணியம் மற்றும் 25 வயதான சிஜேஷ் அசோகன் ஆகியோர் ஆவர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்