பணிப்பெண்ணைத் துன்புறுத்திய பெண்ணுக்கு 9 வார சிறை

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

நுர்ஹுதா ஒத்மான் (வயது 38) தன்னிடம் வேலை செய்த இந்தாேனீசியாவைச் சேர்ந்த 32 வயது நெனி ஜயந்தி கஸ்மாடி முஹாடி என்ற பணிப்பெண்ணைத் துன்புறுத்திய குற்றத்திற்காக அவருக்கு 9 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெனி, தூக்கக் கலக்கத்துடன் காணப்பட்டதால் அவரைத் தோப்புக்கரணம் போடச் சொல்லியும், வேலை தனக்கு திருப்தி தரவில்லை என்றும் அவரை காயப்படுத்தியிருக்கிறார், 3 பெண்களுக்கு தாயான நுர்ஹுதா ஒத்மான்.

இணைய ஊடுருவல்: கிளினிக்கில் 73,000- க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தகவல் பாதிப்பு!

பணிப்பெண்ணைத் தாக்கிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நுர்ஹுதா.

நெனிக்கு இதுவரை 4,000 வெள்ளிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 6ம் தேதியிலிருந்து அவர் சிறைத் தண்டனையை நிறைவேற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 79% பேர்!