சிங்கப்பூர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கும் பணியை தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர்.!

(photo: Facebook)

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதில் தமிழகமும் அதிகளவில் பாதிப்புள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டரின் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் 1400 ஒஸ்ய்ஜ்ன் சிலிண்டர்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்துள்ளார். அதனை தமிழ்நாட்டில் தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கும் பணியை இன்று (26-05-2021) தொடங்கிவைத்தார்.

மேலும், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய அளவு ஆக்சிஜன் வசதியுடன் படுகைகளை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.