பான் தீவு அதிவிரைவுச் சாலையில் ஏழு மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று பிப்ரவரி 13, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் 48 வயதுடைய ஆடவர் ஒருவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
பிற்பகல் 3.50 மணியளவில் Bedok North Flyover அருகே சாங்கியை நோக்கி செல்லும் வழியில் பான் தீவு அதிவிரைவுச் சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட 44 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் விபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள கால்வாயில் விழுந்தார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
“விரைவில் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” – நாட்டு மக்களை அழைக்கும் சிங்கப்பூர்!