பாண்டான் நீர்த்தேக்கம் அருகே ஏற்பட்ட விபத்தில் பாதசாரி மரணம்..!

PHOTO: iStock

பாண்டான் நீர்த்தேக்கம் அருகே பெஞ்சூரு சாலையில் நேற்று புதன்கிழமை (மார்ச் 31) பிற்பகல் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு அதிக COVID-19 பாதிப்பு பதிவு!

அந்த சம்பவத்தை தொடர்ந்து 68 வயதுடைய ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்தில், ஜுராங்கில் உள்ள ஜலான் அஹ்மத் இப்ராஹிம் நோக்கிச் செல்லும் சாலையில் டிரெய்லர் வாகனம் மற்றும் பாதசாரி ஒருவர் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காவல்துறைக்கு மாலை 4.10 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.

48 வயதான பெண் பாதசாரி அந்த இடத்திலேயே இறந்ததாக துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது.

மேலும், 68 வயதான ஓட்டுநர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் உதவி!