உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்- விமான நிலையத்தை அதிர வைத்த பெண்!

Photo: Chennai Customs

வெளிநாடுகளில் இருந்து சுமார் 1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை உள்ளாடைகளில் கடத்திய மூன்று பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

சென்னை மீனப்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து வந்த ஆண் பயணியை சோதித்த போது, உள்ளாடைக்குள் 49.35 லட்சம் மதிப்புள்ள 919 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து 42.38 லட்சம் மதிப்புள்ள 792 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். குவைத்தில் இருந்து வந்திருந்த பெண் பயணியை சோதித்த போது, அவரது உடைமைகளில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 43.23 லட்சம் மதிப்புள்ள 805 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்த தொண்டூழியர்கள்!

சென்னை மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூன்று பேரிடம் இருந்தும் மொத்தம் 1 கோடியே 34 லட்சத்துக்கு 96 ஆயிரம் மதிப்புள்ள 2.516 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்து, அந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.