திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 30) காலை டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (Air India Express) சிங்கப்பூருக்கு புறப்படத் தயாராக இருந்தது. இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் (Immigration) எனப்படும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (வயது 33) என்பவர், சிங்கப்பூரில் இருந்து வந்த தேதியை தனது பாஸ்போர்ட்டில் மாற்றியது மட்டுமின்றி, போலியான சீல் வைக்கப்பட்டிருந்தததைக் கண்ட அதிகாரிகள், அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், திருச்சி விமான காவல் நிலையத்தில் அவரை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஹரிஹரன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி- அனுமதி வழங்கியது இந்தியா!
இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் இருந்த சக பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.