சிங்கப்பூரில் PCF Sparkletots பாலர் பள்ளி ஆசியருக்கு COVID-19 தொற்று; பள்ளி 10 நாட்களுக்கு மூடல்..!

PCF Sparkletots pre-school in Hougang to close for 10 days after teacher contracts COVID-19
PCF Sparkletots pre-school in Hougang to close for 10 days after teacher contracts COVID-19

ஹவாங்கில் உள்ள PCF Sparkletots பாலர் பள்ளி 10 நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளி ஆசிரியருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டு தங்கும் விடுதிகளில் சுமார் 19,800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

அந்த ஆசிரியர் PCF அல்லாத துணை கல்வி நிபுணர் என்று ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு நிறுவனம் (ECDA) திங்களன்று (ஏப்ரல் 6) தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, ஹவ்காங் அவென்யூ-10 புளோக் 414இல் அமைந்திருக்கும் PCF Sparkletots Preschool @ Bedok Reservoir-Punggol பாலர் பள்ளிக்கு அவர் கடைசியாக சென்றிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு மறுநாள் தொற்றுக்கான அறிகுறி காணப்பட்டது.

தொடர்புகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மூடல் நேரத்தில் முழுமையாக கிருமிநீக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு தொற்று உறுதி..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil