பென்ஜூரு சாலையில் லாரி மோதி விபத்து: ஒருவர் மரணம்

Penjuru Road accident motorcyclist dies
Stomp

பென்ஜூரு சாலை மற்றும் தஞ்சோங் பென்ஜூரு சந்திப்பில் நடந்த விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மே 11) நடந்த இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி மோதியது. இதில் 68 வயது ஆடவர் உயிரிழந்தார்.

தொழிற்சாலையில் கரப்பான் பூச்சி, எலி.. முதலாளிக்கு S$18,000 அபராதம்

அன்று மாலை 5.21 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், 68 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு அவரின் உயிர் பிரிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில், 54 வயதான லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.