சிங்கப்பூரில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக ‘P&G’ நிறுவனம் அறிவிப்பு!

சிங்கப்பூரில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக 'P&G' நிறுவனம் அறிவிப்பு!
Photo: P&G

 

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ‘ப்ராக்டர் & கேம்பிள்’ (Procter & Gamble) இந்த நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ‘P&G’ என்றும் அந்த நிறுவனம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓர் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

சிங்கப்பூரில் “buck moon” என்னும் சூப்பர் மூனை காண அரிய வாய்ப்பு – எங்கே, எப்போது காணலாம்?

வீட்டிற்கு தேவையான சோப்பு, ஷேவிங் மெஷின், ஷாம்பூ, சோப்புத் தூள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருத்துங்கள், மாத்திரைகளையும் ‘P&G’ நிறுவனம் உற்பத்திச் செய்து வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் ஆலையை நிறுவி 35 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நிகழ்ச்சி ஒன்றிற்கு ‘P&G’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஜூன் 20- ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதேபோல், ‘P&G’ நிறுவனத்தின் உயரதிகாரிகள், ஊழியர்கள்,சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு – கத்தார் ஏர்வேஸ் விமானத்தை பின்னுக்கு தள்ளி சாதனை

நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் சுமார் 100 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டு, புதிய ஆலை உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 500- க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளைப் பெறுவர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, சிங்கப்பூரில் உள்ள ‘P&G’ நிறுவனத்தில் 2,000- க்கும் மேற்பட்டோர் பணிப்புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.