சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அவர்கள், மலேசியாவின் எட்டாவது பிரதமர் திரு முஹைதீன் யாசின் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் விரைவில் சிங்கப்பூருக்கு வருகை தருமாறும் சிங்கப்பூர் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 4 புதிய COVID-19 சம்பவங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டியது..!
தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து திரு லீ, திரு முஹைதீனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் 1985ஆம் ஆண்டில் திரு முஹைதீனை முதன்முதலில் சந்தித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
அப்போது மலேசிய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சின் துணை அமைச்சராக இருந்த திரு முஹைதீன் அவர்கள் விமான நிலையத்தில் தங்களை வரவேற்றார் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
“அப்போதிருந்து, திரு முஹைதினுடன் பல்வேறு மத்திய அரசாங்க நிலையிலும், அவர் ஜொகூர் முதலமைச்சராக இருந்தபோதும் இணைந்து பணியாற்ற பல வாய்ப்புகள் கிடைத்தன” என்று திரு லீ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியா உணவகங்களின் நிலவேம்புக் கசாயம் மற்றும் நண்டு ரசம்..!