சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தற்போதைய சூழலை அரசாங்க அதிகாரிகள் திறம்பட சமாளித்து இருக்கிறார்கள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முகநூலில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள அரசு ஊழியர்கள் மீள்திறன், துணிவு, ஆற்றல் ஆகியவற்றைப் பலப்படுத்தி இருக்கிறார்கள் என பிரதமர் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவிற்கு மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்த சிங்கப்பூர்.!
கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் திரு லீ நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒவ்வொருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவதன் காரணமாக நமது சூழ்நிலை உறுதியாக மேம்பாடு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய வாழ்க்கை வழமையில் வாழ கற்றுக்கொள்வது மிக முக்கியமானது என்றும், COVID-19 கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து வலுவான நாடாக மேம்படுவதில் நாம் வெற்றி காண்போம் என தான் நம்புவதாக பிரதமர் திரு லீ கூறியுள்ளார்.