சிங்கப்பூரில் ஆறு நாட்களாக 12 வயது சிறுவனை காணவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முஹம்மது சியாஸ்னி முஹம்மது ஜைனி (Muhammed Syaznie Muhammed Zaini) என்ற அந்த சிறுவன், கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 3இல் காணப்பட்டார்.
தகவல் தெரிந்தால் 1800 255 0000 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இல்லையென்றால், ஆன்லைனில் தகவலை சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 9 பேருக்கு தொற்று – தொடரும் தீவீர சோதனை