சிங்கப்பூரில் 17 வயது சிறுமியை 11 நாட்களாக காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் போலீஸ் இன்று (29 ஏப்ரல்) கேட்டுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி
லாலா தாமராணி (Lala Damarani) என்ற அந்த சிறுமி கடைசியாக புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 22ல் கடந்த 18ஆம் தேதி காணப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
தேக்காவில் திருட்டு… ART கருவிகளைத் திருடியதாக பிடிபட்ட இருவர்!