“பொங்கலோ பொங்கல்” – தமிழர் திருநாள் வாழ்த்து கூறிய பிரதமர் லீ

Pongal festival tamil PM lee
(PHOTO: Lee Hsien Loong /Twitter)

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பொங்கலோ பொங்கல்” என்று தமிழ் மொழியில் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் புதிதாக 45 பேருக்கு COVID-19 பாதிப்பு – சமூகத்தில் ஒருவருக்கு தொற்று..

இந்த பண்டிகை நாள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்ததாகவும், மேலும் செழிப்பு நிறைந்ததாக இருக்கட்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகம் இந்த அறுவடை திருவிழாவை நேற்று முதல் வரும் சனிக்கிழமை வரை 4 நாட்கள் கொண்டாடுவர் என்று கூறிய அவர், ஒவ்வொரு நாளும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் தொற்றுநோய் காரணமாக ஓரளவு குறைவாக இருந்தாலும், லிட்டில் இந்தியாவில் பொங்கல் ஒளியேற்றம் மற்றும் ஏராளமான ஆன்லைன் நடவடிக்கைகள் பற்றியும் கூறினார்.

காட்டுப்பன்றிகளுக்கு உணவளித்த 4 பேருக்கு தலா S$2,500 அபராதம் – 19 பேர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…