சிங்கப்பூரில் உள்ள கெய்லாங் ஈஸ்ட் அவெனியூ 2-ல் (24 Geylang East Avenue 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயிலில் பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த விசேஷமான நாளில் வழக்கத்தை விட, அதிக பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர்.
அந்த வகையில், ஆகஸ்ட் 28- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று பிரதோஷம் என்பதால், ஸ்ரீ சிவன் கோயிலில் அன்றைய தினம் மாலை 04.00 மணியளவில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளது.
அபிஷேக பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் https://sst.org.sg/ என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்தி விடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும்.
Concorde ஷாப்பிங் மால் கலகம்: சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட அஸ்வைன்
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு பேசலாம் என இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.