புரட்டாசி பிரம்மோற்சவம்: சிங்கப்பூர்- திருப்பதி இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"இந்தியாவில் மேலும் ஒரு நகரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை... பயணக் கட்டணம் இவ்வளவு தான்"- இண்டிகோ ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
Photo: Changi Airport

 

 

உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 13 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் விழாவில், நாள்தோறும் ஏழுமலையானுக்கு விஷேச பூஜைகள், சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் லாரி விபத்துக்கள் யாரால் ஏற்படுகிறது?

இதனை காண இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொள்வர். இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் திருப்பதி இடையே பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் வழியாக தினசரி இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் தொடங்கியுள்ள நிலையில், சிங்கப்பூர்- திருப்பதி இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக்கான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜொலிக்கும் சிராங்கூன் சாலை….”தீபாவளி ஓளியூட்டு விழா” தொடர்பான லிஷாவின் அறிவிப்பு!

விமான பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு www.goindigo.in என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.