காமன்வெல்த் MRT நிலையம் அருகே வேலைக்குச் செல்லும் வழியில் பெரிய மலைப்பாம்பை கடந்தாக ஊழியர் ஒருவர் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) காமன்வெல்த் MRT நிலையத்திற்கு அருகே வேலைக்குச் செல்லும் வழியில் மலைப்பாம்பை எதிர்கொண்டது பெரும் ஆச்சரியமாக இருந்தது என்று ஸ்டோம்பர் ரீனா கூறியுள்ளார்.
“அன்று காலை 6.14 மணியளவில் MRT நிலையத்திற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பிளாக் 90 காமன்வெல்த் டிரைவில் உள்ள சமுதாயக் கூடம் அருகே மலைப்பாம்பைப் பார்த்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“பாம்பு சாலை தடுப்பின் பக்கத்திலிருந்து வெளியே வந்து அருகில் உள்ள கால்வாய் துளைக்குள் சென்று கொண்டிருந்தது” என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்பு பாம்பைப் பார்த்த சிலர், இந்த பகுதியில் கவனமாக நடக்க வேண்டும் என்று நினைவூட்டியதால் அதைக் கவனமுடன் காணமுடிந்ததாக அவர் கூறினார்.
அந்த பகுதி வழியே செல்லும் ஊழியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதை நினைவு கூறவே இந்த பதிவு.