சிங்கப்பூரில் தற்போதைய நிலவி வரும் ஈரப்பதமான வானிலை இந்த அக்டோபர் மாதம் முழுவதும் தொடரும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
மேலும், பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அதாவது இந்த மாத இறுதி நாட்களில் நிலவும் வானிலையானது அடுத்த நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் அது கூறியுள்ளது.
“ஒட்டுமொத்தமாக, அக்டோபர் மாதத்திற்கான மழைப்பொழிவு சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
அக்ட் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாட்களில் மழை எதிர்பார்க்கப்பட்டாலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை சில நாட்களில் 34 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் எனவும் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது