சிங்கப்பூரில் 2 வருட இடைவெளிக்குப் பிறகு, கோலாகலமாக தொடங்கிய “நோன்பு பெருநாள் ஒளியூட்டு விழா”

geylang-serai-bazaar-comeback
Lee Hsien Loong/FB

சிங்கப்பூரில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

புனித ரமலானை முன்னிட்டு Geylang Seraiயில் நோன்பு பெருநாள் ஒளியூட்டு கொண்டாட்டம் நேற்று (25 மார்ச்) இரவு உற்சாகமான முறையில் தொடங்கப்பட்டது. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் புனித ரமலான் நோன்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவது எங்கு கட்டாயம்? எங்கு கட்டாயம்மில்லை? – வாங்க பார்க்கலாம்!

இந்த ஒளியூட்டு சிறப்பு நிகழ்வை சிங்கப்பூரின் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் சிறப்பாக தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட இந்த கொண்டாட்டங்கள், விஸ்மா கெய்லாங் செராய் (Wisma Geylang Serai – WGS) மற்றும் கம்போங் கெலாம் (Kampong Gelam) ஆகிய இரண்டு இடங்களிலும் மீண்டும் வரும் என தேசிய வளர்ச்சி இணை அமைச்சர் பைஷல் இப்ராகிம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஆண்டின் நோன்பு பெருநாள் பஜார் கோவிட்-19க்கு முந்தைய நாட்களை விட மிகச் சிறிய அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜொலிக்க உள்ள “ரமலான் பஜார் & ஒளியூட்டு” அலங்காரங்கள்!

“பஜார் மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும், WGS கட்டிடத்திற்கு அருகில் இரண்டு பகுதிகளாக அது இருக்கும்.”

“ஒவ்வொரு பகுதியிலும் அதிகபட்சம் 20 ஸ்டால்கள் இருக்கும்” என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.!