ரெட்ஹில் குடியிருப்பில் திடீர் தீ விபத்து- இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Photo: Shin Min Daily News

கடந்த ஏப்ரல் 27- ஆம் தேதி அன்று மாலை 03.40 PM மணியளவில் சிங்கப்பூரின் ரெட்ஹில் (Redhill) பகுதியில் உள்ள ஜலான் புக்கிட் மேராவில் உள்ள புளோக் 110 (Block 110 Jalan Bukit Merah) அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் (Singapore Civil Defence Force- ‘SCDF’), காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதிரடி ஆஃபரை அறிவித்துள்ள பிரபல உணவகம்!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ கொளுந்து விட்டு எரிந்ததைக் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு கருவிகளுடன் தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் நுழைந்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்த 19 மாத குழந்தையும், 8 வயது சிறுவனும், கே.கே. பெண்கள் மற்றும் சிறார் மருத்துவமனையில் (KK Women’s and Children’s Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘குறைந்த கட்டணத்தில் திருச்சியில் இருந்து சிட்னிக்கு விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த ஏ.சி. தீப்பிடித்து வெடித்துள்ளது. அத்துடன், அந்த ஏ.சி. புதியது இல்லை என்றும், வேறொரு நபரிடம் பெறப்பட்ட ஏ.சி. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.