‘குறைந்த கட்டணத்தில் திருச்சியில் இருந்து சிட்னிக்கு விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

கோடைக்கால விடுமுறையையொட்டி, ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Scoot Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் ஆறு நகரங்களில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னிக்கு குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.

புதிதாக 1,000 விமானிகளை பணியமர்த்தவுள்ள ஏர் இந்தியா நிறுவனம்!

அதன்படி, அமிர்தசரஸில் இருந்து சிட்னிக்கு ரூபாய் 17,999 ஆகவும், ஹைதராபாத்தில் இருந்து சிட்னிக்கு ரூபாய் 16,999 ஆகவும், கோயம்புத்தூரில் இருந்து சிட்னிக்கு ரூபாய் 15,999 ஆகவும், திருவனந்தபுரத்தில் இருந்து சிட்னிக்கு ரூபாய் 15,999 ஆகவும், திருச்சியில் இருந்து சிட்னிக்கு ரூபாய் 15,999 ஆகவும், விசாகப்பட்டினத்தில் இருந்து சிட்னிக்கு ரூபாய் 15,999 ஆகவும் விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று காலை 07.30 மணிக்கு தொடங்கி, வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி அன்று நள்ளிரவு 09.29 மணியுடன் நிறைவடையும். பதிவுச் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வரும் நவம்பர் 30- ஆம் தேதி வரை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதிரடி ஆஃபரை அறிவித்துள்ள பிரபல உணவகம்!

எனினும், திருச்சியில் இருந்து புறப்படும் ஸ்கூட் விமானம், சிங்கப்பூர் வழியாக சிட்னி நகருக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.