சிங்கப்பூரில் கடல் பயணத்தை அனுபவித்தது உண்டா? – 24 பேர் செல்லும் படகு வாடகை – மீன், BBQ என மகிழ்ச்சியாக கழிக்கலாம்!

சிங்கப்பூரில் நீங்கள் கடல் பயணத்தை அனுபவித்தது உண்டா ? இல்லை என்றால் இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்.

முழு படகு வாடகைக்கு விடப்படும் என்று மார்ச் 12 அன்று வெளியான ஒரு பேஸ்புக் பதிவில் விளம்பரம் செய்யப்பட்டது.

அதாவது சுமார் 24 பேர் வரை ஒரே நேரத்தில் அதில் பயணிக்கலாம் என்றும், அதற்கான வாடகை S$2,000 என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!

இந்த பதிவு 1,000 முறைக்கு மேல் பகிரப்பட்டதால் அதில் குறிப்பிடத்தக்க ஆர்வம் உள்ளதை நாம் அறிய முடிகிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பம் அல்லது வெளிநாட்டு ஊழியர்கள் குழுவாக சேர்ந்து இதில் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் பயணத்திற்காகவும் அல்லது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை இரவு பயணத்திற்காகவும் இதனை வாடகைக்கு எடுத்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த படகு புறப்பட்டு, சரியாக Ketam தீவு அல்லது புலாவ் உபினில் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் செல்லும் நபர்கள் மீன் பிடிக்கலாம் அல்லது போர்டு கேம்களை விளையாடலாம், Barbeque கூட செய்ய வாய்ப்பு உள்ளது.

அதாவது குறைந்தபட்சம் S$300 மதிப்புள்ள நேரடி கடல் உணவு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதனை நாம் சமைத்து சாப்பிடலாம்.

பயணம் தொடங்கி முடியும் இடம்: சாங்கி பாயிண்ட் ஃபெர்ரி டெர்மினல்

லாட்டரி வாங்கியவர், கொண்டு சென்றவர் உட்பட 12 பேரிடம் போலீஸ் விசாரணை