“வரிசையாக வாங்கனு சொன்னது குத்தமா?” – ஊழியரை கடுமையாக தாக்கிய இருவர்

restaurant- workers attack malaysia

மலேசியாவில் உணவக ஊழியர் ஒருவரை இருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஊழியர் அவர்களை வரிசையில் நிற்க வைத்ததால் கோபத்தில் அவர்கள் ஊழியரை தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (மார்ச். 16) இரவு சிலாங்கூரில் உள்ள க்ளோமாக் சைபர்ஜெயாவில் உள்ள உணவகத்தில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர் அதில் ஒருவரை வரிசையில் முறையாக நிற்க சொன்னதாகவும், இதனால் கோபமடைந்த அவர்கள் ஊழியரை தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் இருவருக்கு தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஏராளமான தட்டுகளும் உடைந்தன.

பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு செம்ம சான்ஸ் – இப்போதே சேர்ந்து பயனடையுங்கள்