கலவரத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது – காவல்துறை விசாரணை

rioting at Clementi
Photo Credit: Singapore Police

கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், 17 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (ஆக.17) கிளெமென்டி அவென்யூ 2ல் இரண்டு குழுக்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த கலகம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலையிடங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு – அலுவலகங்களுக்குத் திரும்பும் ஊழியர்கள்

இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என்றும், மேலும் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதில் நான்கு பேர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதே நாளில், 17 மற்றும் 18 வயதிற்குட்பட்ட இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 15 முதல் 43 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், தற்போது காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர். இதன் சாட்சியாக ஒரு கத்தியும் கைப்பற்றப்பட்டது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.