சிங்கப்பூரில் இவர்களுக்கு சம்பள உயர்வு – ஜன.1 முதல் அமல்

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

சிங்கப்பூர்: உள்துறை அமைச்சகத்தில் (MHA) பணியாற்றும் சுமார் 22,000 அதிகாரிகளுக்கு சம்பளம் உயர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர்களின் மொத்த மாதச் சம்பளத்தில் 3% முதல் 10% வரை சம்பளம் உயரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தியை MHA நேற்று திங்கள்கிழமை (31 அக்டோபர்) செய்திக்குறிப்பில் அறிவித்தது.

ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை… சிக்கிய நிறுவனங்கள் – 12 வேலை நிறுத்த உத்தரவுகள், 232 அபராதங்கள்

சம்பள உயர்வை பெறும் அதிகாரிகள்

  • உள்துறை சீருடை சேவைகள் பிரிவு (HUS)
  • உள்துறை சேவைகள் (HAS-ICA)
  • சிறப்பு நிபுணத்துவத் திட்டம் (HTSS)
  • வர்த்தக விவகாரத் திட்டம் (HTSS)

ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் அந்த சம்பள உயர்வை பெறுவர் என சொல்லப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் சம்பள மாற்றங்கள் நடப்புக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.