சிங்கப்பூர்: உள்துறை அமைச்சகத்தில் (MHA) பணியாற்றும் சுமார் 22,000 அதிகாரிகளுக்கு சம்பளம் உயர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர்களின் மொத்த மாதச் சம்பளத்தில் 3% முதல் 10% வரை சம்பளம் உயரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தியை MHA நேற்று திங்கள்கிழமை (31 அக்டோபர்) செய்திக்குறிப்பில் அறிவித்தது.
சம்பள உயர்வை பெறும் அதிகாரிகள்
- உள்துறை சீருடை சேவைகள் பிரிவு (HUS)
- உள்துறை சேவைகள் (HAS-ICA)
- சிறப்பு நிபுணத்துவத் திட்டம் (HTSS)
- வர்த்தக விவகாரத் திட்டம் (HTSS)
ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் அந்த சம்பள உயர்வை பெறுவர் என சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் சம்பள மாற்றங்கள் நடப்புக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.