சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள், சம்பள உயர்வை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா சூழலுக்கு பிறகு வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது. எனவே தங்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதன் தொடர்பில் முதலாளிகளிடம் வலியுறுத்த தயாராக உள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள பத்தில் ஆறு ஊழியர்கள் சம்பள உயர்வு கோரத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 25 முதல் 34 வயதினர் மத்தியில் இந்த விகிதம் 10க்கு 7ஆக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் 17 நாடுகளில் கிட்டத்தட்ட 33,000 ஊழியர்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
சம்பள உயர்வு பெறத் தங்களுக்குத் தகுதி இருக்கிறது என்ற நம்பிக்கை 75 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் உள்ளது.
உலகளவில் பணவீக்கம் உயர்ந்துள்ளதால், உலகின் பல பகுதிகளிலும் வாழ்க்கைச் செலவினம் வேகமாக அதிகரித்து வருகிறது. .
சிங்கப்பூரில் பத்தில் ஐந்து ஊழியர்கள் அடுத்த 12 மாதங்களில் சம்பள உயர்வை எதிர்பார்ப்பதாகவும் பத்தில் நால்வர் தங்களுக்கு போனஸ் வழங்கப்படுவதை எதிர்பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.