கோவிட் காலத்தில் ஏற்பட்ட பல சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட பிரபல சரவண பவன் உணவகம் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறப்புவிழா காணவுள்ளது.
6 கிளைகளுடன் செயல்பட்டு வந்த அந்த உணவகம் கடந்த 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, லிட்டில் இந்தியாவில் சென்ட்ரியம் ஸ்க்குவேர் (Centrium Square) முதல் தளத்தில் ஜன.23 ஆம் தேதி அன்று திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய உணவகமான சரவண பவன் உலக அளவில் மிகவும் பிரபலமான உணவகமாகும்.
கோவிட் காலத்தில் மனிதவளத்தில் ஏற்பட்ட மிக பெரிய பற்றாக்குறை காரணமாக அந்த உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது மனிதவளம் பெரிய அளவில் கிடைக்கப் பெறுவதாலும், சைவ உணவுக்கான நாட்டம் அதிகரித்திருப்பதாலும் மீண்டும் உணவகம் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 550 உணவு வகைகளுடன் அது மீண்டும் திறக்கப்படுவதாக அதை எடுத்து நடத்தும் திரு.அசோக் சௌத்ரி கூறினார்.
3 நேரமும் அனைவருக்கும் உணவு வழங்கும் நோக்கத்தோடு காலை 7 மணி முதல் இரவு 11 வரை உணவகம் இயங்கும் என சொல்லப்பட்டுள்ளது.
மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணைதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு